20 July 2010

எண்ணப்பத்து - 1

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 72
அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு
வடிகளை யன்போடும்
பணிகிலே னகமுருகி நின் றாடிலேன்
பாடிலேன் மனமாயை
தணிகிலேன் திருத் தணிகையை நினைகிலேன்
சாமிநின் வழி போகத்
துணிகிலே னிருந்தென் செய்தேன் பாவியேன்
துன்பமும் எஞ்சேனே.

உரை:
அழகிய வேற்படையைக் கையில் ஏந்துகிற பெருமானே, உன்
திருவடிகளை அன்புடன் வணங்குகிறேனில்லை; மனம் உருக உன் திருமுன் நின்று
ஆடுகின்றேனில்லை; வாயாற் பாடுவதுமில்லை; மனமயக்கத்தை தரும் வெம்மையும்
தணிகிறேனில்லை; நீ எழுந்தருளும் திருத்தணிகையை நினைப்பதுமில்லை; உன்
நெறியில் ஒழுக நெஞ்சம் துணிகிறேனில்லை; இத்தகைய என் செய்கைகள் இன்பம்
தராவிட்டாலும் துன்பத்தையும் குறைக்கவில்லை.

No comments:

Post a Comment