சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள்
சொல்லு மெல்லாம்
வல்லாயென் றேத்த வறிந்தேன்
இனி யென்றன் வல்வினைகள்
எல்லாம் விடை கொண்டிரியும் என்மேல்
இயமன் சினமும்
செல்லாது காண் ஐயனே தணிகாசலச்
சீரரைசே.
உரை:
தணிகை மலையில் இருந்தருளும் சீர் பொருந்திய அருளரசே;
முருகப்பெருமானே; ஐயனே; சொற்களாகிய மலர் கொண்டு மாலை தொடுத்து சான்றோர்
சொல்வன யாவும் நீ வல்லவன் என ஏத்துவதை தெரிந்து கொண்டேன்; இனி என்னைச்
சூழ்ந்துள்ள வல்வினைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி விடும்; என் மேல்
இயமன் கொண்டிருக்கும் கோபமும் வலுவிழந்து விடும்.
No comments:
Post a Comment