பொன்னார் புயத்தனும் பூவுடை யோனும்
புகழ் மணியே
என்னாவி யின்றுணையே தணிகாசலத்
தேயமர்ந்த
மன்னா நின் பொன்னடி வாழ்த்தாது
வீணில் வருந்துறுவேன்
இன்னா வியற்று மியமன் வந்தாலவற்
கென் சொல்வனே.
உரை:
திருத்தணிகை மலையில் எழுந்தருளும் மன்னனே; முருகப் பெருமானே;
திருமகள் வீற்றிருக்கும் தோளையுடைய திருமாலும், தாமரைப்பூவை இடமாக உடைய
பிரமனும் போற்றும் புகழ் பொருந்திய மாணிக்க மணியே; எனக்குயிர்த்
துணையாகியவனே; உன் திருவடியை வாழ்த்தாமல் வீணே வருந்துகிறேனே, நோய்
செய்து உயிர் கவரும் எமன் வந்தால் அவனுக்கு யான் என்ன சொல்வேன் ?
No comments:
Post a Comment