20 July 2010

பிரார்த்தனை மாலை - 28

பண்ணவனே நின் பதமல ரேத்தும்
பயனுடையோர்
கண்ணவனே தணிகா சலனே யயிற்
கையவனே
விண்ணவ ரேத்திய மேலவனே மயல்
மேவுமனம்
புண்ணவ னேனையும் சேர்ந்தா யென்னே
யுன்றன் பொன்னருளே.

உரை:
தணிகை மலையை உடையவனே; முருகப் பெருமானே; தேவர்கள்
போற்றுகின்ற மேலோனே; பெருவலிமை படைத்தவனே; உன் திருவடித் தாமரையை
வழிபடும் நல்வினைப் பயனை உடையவர்க்குக் கண்ணாய் விளங்குபவனே; மயக்கம்
பொருந்திய மனம் புண்ணுற்றிருக்கும் எளியேன் உள்ளத்திலும்
எழுந்தருளிகிறாயே ! உன் அருட் செயலை என்னவென்பேன் ?

No comments:

Post a Comment