19 July 2010

பிரார்த்தனை மாலை - 27

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 68
அடையாத வஞ்சகர்பாற் சென்றிரந்திங்
கலைந் தலைந்தே
கடையான நாய்க்குன் கருணை யுண்டோ
தணிகைக்கு ணின்றே
உடையாத நன்னெஞ்சர்க் குண்மையைக்
காண்பிக்கும் உத்தமனே
படையாத தேவர் சிறைமீட் டளித்தருள்
பண்ணவனே.

உரை:
தணிகைப் பதியில் எழுந்தருளுபவனே; துன்பத்தால் வருத்தமுறாத
நல்ல மனமுடையவர்க்கு மெய்ப்பொருளை உணர்த்துபவனே; உத்தமனே; படைக்கும்
கடவுளான பிரமன் முதலான தேவர்களை அசுரர்களிடமிருந்து சிறை மீட்டவனே;
கடவுளே; ஈகைப் பண்பு இல்லா வஞ்சகரிடம் அலைந்து திரிந்து இரந்த கடையனாகிய
இந்நாய்க்கு உன் கருணை உண்டோ?

No comments:

Post a Comment