19 July 2010

பிரார்த்தனை மாலை - 26

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 67
தணியாத துன்பத் தடங்கடல் நீங்க நின்
றண்மலர்த் தாள்
பணியாத பாவிக் கருளு முண்டோ பசு
பாச மற்றோர்க்
கணியாக நின்ற வருட் செல்வமே தணி
காசலனே
அணி யாதவன் முதலா மட்ட மூர்த்தம்
அடைந்தவனே.

உரை:
தணிகை மலையுடைய பெருமானே, சூரியன், சந்திரன், உயிர்க்குயிர்,
நிலம், நீர், தீ, காற்று, வானம் என எட்டு உருவாகியவனே; பசுவாகிய உயிரைப்
பிணித்திருக்கும் மலம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களாகிய பாசத்தை
அற்றவர்க்கு அணியாக நின்று அருள் வழங்கும் செல்வமே; உன் குளிர்ந்த மலர்
போன்ற திருவடியைப் பணியாத எனக்கு துன்பக் கடலிலுருந்து நீங்க அருள்
உண்டோ?

No comments:

Post a Comment