திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 66
மண்ணீ ரனல்வளி வானாகி நின்றருள்
வத்து வென்றே
தெண்ணீர் மையாற் புகழ் மாலயனே முதல்
தேவர்கடம்
கண்ணீர் துடைத்தருள் கற்பகமே யுனைக்
கண்டு கொண்டேன்
தண்ணீர் பொழிற்கண் மதிவந் துலாவும்
தணிகையிலே.
உரை:
குளிர்ந்த சோலைகளில் நிலவு வந்து தவழும் தணிகை மலையில்
நிலம், நீர், காற்று, விண் என ஐந்துமாகிய பரம்பொருளே, தேவர்களின் துயரைப்
போக்கியருளியவனே, கேட்டதை அளிக்கும் கற்பகமே, உன்னைக் கண்டு கொண்டேன்;
அதனால் இனி எனக்குக் குறையேதும் இல்லை.
No comments:
Post a Comment