18 July 2010

பிரார்த்தனை மாலை - 24

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 65
சாரும் தணிகையிற் சார்ந்தோய் நின்
தாமரைத் தாட்டுணையைச்
சேரும் தொழும்பர் திருப்பத மன்றியிச்
சிற்றடியேன்
ஊரும் தனமும் உறவும் புகழும்
உரை மடவார்
வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன்
மண் விண்ணிலே.

உரை:
உயர்ந்தோர் வந்து பரவும் தணிகை மலையில்
எழுந்தருளியிருப்பவனே, முருகப்பெருமானே, உன் பாதக்கமலங்களை நினைந்து
வழிபடும் தொண்டர்களின் திருவடிகளை விடுத்து யான் ஊர்களும், செல்வமும்,
உறவினரும், புகழும், இன்னுரை கூறும் மகளிரின் இன்பமும் பெற
விரும்புகிறேன். சிற்றியல்புகளையுடைய அடியனாகிய யான் விண்ணும் மண்ணுமாகிய
உலகங்களிற் பெறும் போகங்களை விரும்புகிறேன்.

No comments:

Post a Comment