18 July 2010

பிரார்த்தனை மாலை - 23

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 64
என்செய்கை என்செய்கை எந்தாய்நின்
பொன்னடிக்கே யலங்கல்
வன்செய்கை நீங்க மகிழ்ந்தணியேன் துதி
வாயுரைக்க
மென்செய் கைகூப்ப விழிநீர் துளித்திட
மெய் சிலிர்க்கத்
தன்செய்கை என்பதற்றே தணிகாசலம்
சார்ந்திலனே.

உரை:
எந்தையாகிய முருகப்பெருமானே, உன் தணிகைமலையை அடைந்து
பணியவில்லை; என் வன்செயல்கள் கெடும் பொருட்டு என் செயல் என உணர்வற்று
உன்னை வணங்கவில்லை; வாய் உன் துதிகளைச் சொல்ல கைகள் தலையில் குவிய,
கண்கள் நீர் சுரக்க, மெய் சிலிர்க்க உன் திருவடிக்கு மாலை அணியவில்லை;
இத்தகைய என் செய்கைகளைப் பொறுத்தருளுக.

No comments:

Post a Comment