18 July 2010

பிரார்த்தனை மாலை - 22

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 63
தலனே யடியர் தனிமனமாம் புகழ்
சார் தணிகா
சலனே யயனரி யாதியர் வாழ்ந்திடத்
தாங்கயில் வேல்
வலனே நின்பொன் னருள் வாரியின் மூழ்க
மனோலயம் வாய்ந்
திலனேல் சனனமரண மென்னும் கடற்
கென் செய்வேனே.

உரை:
புகழ் பொருந்திய தணிகை மலையை உடையவனே, பிரமன் திருமால்
முதலிய தேவர்கள் இனிதே வாழ கையில் கூரிய வேற்படையை ஏந்துபவனே,
அடியார்களின் மனமே கோயிலாகக் கொண்டவனே, உன் அழகிய திருவருட் கடலில்
மூழ்கித் திளைக்க மனஒருமை பொருந்தவில்லை; பிறப்பு இறப்பு எனும் கடலைக்
கடக்க முடியவில்லை; யான் என்ன செய்வேன், அருள் புரிக.

No comments:

Post a Comment