18 July 2010

பிரார்த்தனை மாலை - 21

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 62
அடியேன் எனச் சொல்வ தல்லானின் றாளடைந்
தாரைக் கண்டே
துடியே னருணகிரி பாடும் நின்னருள்
தோய் புகழைப்
படியேன் பதைத் துருகேன் பணியேன்
மனப்பந்த மெலாம்
கடியேன் தணிகையைக் காணேன்என்
செய்வே னெங் காதலனே.

உரை:
அன்புடையவனே, முருகப்பெருமானே, உன் அடியவன் என சொல்லிக்
கொண்டாலும் உன் திருவடியை அடைந்த பெரியோரைக் கண்டால் அன்பால் என் மனம்
துடிப்பதில்லை; அருணகிரியார் பாடிய உன் அருள் வாய்ந்த திருப்புகழ் நூலை
யான் படிப்பதில்லை; அன்புற்று உள்ளம் பதைப்பதில்லை; உருகுவதில்லை. உடலால்
பணிவதில்லை; பந்தமாய் உள்ளவற்றை நீக்கினேனில்லை; உனது தணிகை மலையைத்
தரிசிப்பது மில்லை; யான் என்ன செய்வேன் ?

No comments:

Post a Comment