திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 61
தெள்ளகத் தோங்கிய செஞ்சுடரே
சிவ தேசிகனே
கள்ளகத் தேமலர் காவார் தணிகையெங்
கண்மணியே
எள்ளகத் தேயுழன் றென்னின்றலைத் தெழுந்
திங்கு மங்கும்
துள்ளகத் தேன்சிரம் சேருங் கொலோநின்
துணையடியே.
உரை:
அகத்தே தேன் நிறைந்த மலர்ச் சோலைகள் பொருந்திய
திருத்தணிகையில் எழுந்தருளும் எங்கள் கண்மணியே, தெளிந்த மனமுடைய
உள்ளத்தில் ஓங்குகின்ற செஞ்சுடரே, சிவகுருவாயவனே, யாவராலும் இகழப்படும்
மனைவாழ்விற் கிடந்து வருந்தி, பல்வகை ஆசைகளால் ஆட்கொள்ளப்பட்டு
இங்குமங்கும் அலையும் என் தலைமேல் உன் இரு திருவடிகள் வந்து பொருந்துமோ,
அறியேன்.
No comments:
Post a Comment