திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 60
இருப்பாய மாய மனத்தால் வருந்தி
இளைத்து நின்றேன்
பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது
போதுமின்றே
கருப்பால் செயும் உன் கழலடிக்கே யிக்
கடையவனைத்
திருப்பா யெனிலென் செய்கேன் தணிகாசலத்
தெள்ளமுதே.
உரை:
திருத்தணிகை மலையில் எழுந்தருளும் தெளிவான அமுதுப்
போன்றவனே, முருகப்பெருமானெ, எளிதில் உருகாத இரும்பு போன்ற மாய மனதால்
வருத்தமுற்று இளைத்துள்ளேன்; மலை போன்ற வினைகள் சூழ்ந்த மண்ணக வாழ்வில்
புதைந்துள்ளேன்; இப்பிறவியாகிய காட்டை அழிக்கும் உன் திருவடி மீது என்
மனதை நீ திருப்பிச் செலுத்தாவிடில் யான் என்ன செய்ய முடியும்?
No comments:
Post a Comment