திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 59
நவையே தருவஞ்ச நெஞ்சக மாயவும்
நானு னன்பர்
அவையே யணுகவும் ஆனந்த வாரியில்
ஆடிடவும்
சுவையே யமுதன்ன நின்றிரு நாமம்
துதிக்கவு மாம்
இவையே யெனெண்ணம் தணிகா சலத்துள்
இருப்பவனே.
உரை:
திருத்தணிகை முருகனே, நெஞ்சில் தோன்றும் வஞ்ச நினைவுகள்
கெடுவதும், அடியனாகிய யான் உன் அன்பர் கூட்டத்தை அடைவதும், அங்குப்
பெருகும் ஞானப் பெருக்கில் ஆனந்தமாக ஆடிடவும், சுவை மிக்க அமுதம் போன்ற
உன் திருப்பெயர்களை ஓதித் துதிப்பதும் ஆகிய இவைகளே என் எண்ணங்களாகும்.
No comments:
Post a Comment