திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 58
கேளாது போலிருக்கின்றனை யேழையிக்
கீழ் நடையில்
வாளா விடர் கொண்டலறிடும் ஓலத்தை
மாமருந்தே
தோளா மணிச்சுடரே தணிகாசலத்
தூய்ப் பொருளே
நாளாயி னென் செய்குவே னிறப்பாய
நவை வருமே
உரை:
தணிகை மலையில் வீற்றிருக்கும் தூயப்பொருளே, முருகப்பெருமானே,
துளைக்கப்படாத உயரிய முத்தாகிய மணியின் ஒளியே, மாமருந்தே, ஏழையாகிய நான்
கீழ்ப்பட்டதான உலக நடையில் தோய்ந்து, துன்பம் பல கொண்டு அலறி
குக்கூரலிடுகிறேன். என் ஓலத்தைக் கேளாதவன் போல் இருக்கின்றாயே; இவ்வாறு
நாட்கள் கழிந்தால் இறத்தல் துன்பம் வந்து உன்னை மறக்கும் நிலைக்கு
ஆளாவேன்
No comments:
Post a Comment