திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 57
செங்கையங் காந்த ளனையமின் னார்தம்
திறத் துழன்றே
வெங்கய முண்ட விளவாயினேன் விறல்
வேலினையோர்
அங்கையி லேந்திய ஐயா குறவர்
அரிதிற் பெற்ற
மங்கை மகிழும் தணிகேசனே யருள்
வந்தெனக்கே
உரை:
குறவர் தவமிருந்து பெற்ற மங்கையாகிய வள்ளியைக் கூடி மகிழும்
தணிகை மலைத் தலைவனே, வெற்றியையே அளிக்கும் வேற்படையை ஒரு கையில் ஏந்திக்
கொண்டிருக்கும் அழகனே, செங்காந்தள் மலர்களைப் போல் சிவந்த கைகள் உடைய
மகளிர் உறவு கொண்டு உள்ளத்தில் பக்தி இல்லாது கெட்டேனினும் எனக்கு அருள்
புரிந்து ஆண்டருள்க.
No comments:
Post a Comment