17 July 2010

பிரார்த்தனை மாலை - 15

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 56
கையாத துன்பக் கடல்மூழ்கி நெஞ்சம்
கலங்கி யென்றன்
ஐயாநின் பொன்னடிக் கோல மிட்டே
னென்னை யாண்டு கொளாய்
மையார் தடங்கண் மலைமகள் கண்டு
மகிழ் செல்வமே
செய்யார் தணிகை மலை யரசே யயிற்
செங்கையனே.

உரை:
நன்செய், புன்செய் வயல்கள் சுழ்ந்த திருத்தணிகை மலைக்கு
அரசே, வேலேந்தும் சிவந்த கையை உடையவனே, மை தீட்டிய பெரிய கண்களையுடைய
உமையம்மை கண்டு இன்புறும் செல்வ மகனே, கரையேற விடாமல் ஆழ அழுத்தும்
துன்பக் கடலில் மனம் வருந்தி, உன் பொன்னடி நோக்கி ஓலமிடுகிறேன். என்னை
ஆட்கொண்டருள்வாயாக.

No comments:

Post a Comment