16 July 2010

பிரார்த்தனை மாலை - 14

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 55
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ
மணிச்சுடரே
நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென
நண்ணி நின்றேன்
ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம்
இருங்கணிப்பூந்
தேனோ டருவி பயிலும் தணிகைச்
சிவ குருவே.

உரை:
வேங்கை மரங்களின் பூக்கள் சொரியும் தேன் கலந்து அருவிகள்
வீழும் தணிகை மலையில் எழுந்தருளும் சிவகுருவே, வானுலகக் குடிகளாகிய
தேவர்களை வாழ்வித்த மாணிக்க மணியின் ஒளியே, நான் ஓர் எளியன் ஆதலால் என்
துன்பம் போக்கி ஆண்டு கொள்க என வேண்டி நிற்கிறேன்; என்னைக் கண்டு உன்
மனம் இரங்காதிருப்பது ஏனோ, அறியேன்.

No comments:

Post a Comment