திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 37
கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத்தவருக் கருள்வோய் சரணம்
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவாகிய நல்லொளியே சரணம்
காலற் றெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை:
அழகிய குறமகளாகிய வள்ளி நாயகியார் கணவனே, உயர் குலத்துப் பெரிய
மாணிக்க மணியே, சீலமுடைய பெரியோர்க்கு அருள் செய்பவனே, சிவபெருமான் மகனே,
நிலத்தில் வாழும் மக்களின் துன்பத்தைப் போக்குபவனே, நீதி வடிவாகிய நல்ல
ஒளிப் பொருளே, நமன் போந்து செய்யும் துன்பத்தை நீக்குபவனே, கந்தசாமிக்
கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாகும்.
No comments:
Post a Comment