05 July 2010

கந்தர் சரணப்பத்து - 5

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 36

நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுண் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
ஆடுகின்ற ஒப்பற்ற மயிலை வாகனமாக உடையவனே, நல்லவர்கள் பாராட்டு
வல்லமை உடையவனே, தேகத்திற்கு வண்மையும் வாழ்க்கைக்குச் செல்வமும்
தருபவனே, தேவர்கள் எய்துதற்கு அரியவனே, பெரிய வண்மையுடைய தோளை உடையவனே,
ஒப்பற்ற பெரிய முதல்வனே, தெய்வ மணியே, கந்தசாமிக் கடவுளே சரணம் சரணம்
சரணம்.
--
Sent from my mobile device

No comments:

Post a Comment