05 July 2010

கந்தர் சரணப்பத்து - 4

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 35

பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவ சண்முகனே சரணம் சரணம்
காவேர் தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
மலராகவும் மணமாகவும் உள்ளவனே, பொருட் செல்வமும்
அருட்செல்வமுமானவனே, தலைவனே, குகப் பெருமானே, ஞானாசிரியனே, ஞானச்
செல்வமே, தேவனே, தெளிவின் வடிவானவனே, சிவ சண்முகக் கடவுளே, கற்பகச்
சோலைக்கு அழகு தரும் கற்பதருவே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே
எனக்குப் புகலிடமாகும்.
--
Sent from my mobile device

No comments:

Post a Comment