திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 34
முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவே லரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை:
முடியா முதற் பொருளே, முருகனே, குமரனே, வடிவேல் ஏந்தும் அரசனே,
மயிலேறும் மணிபோன்ற பெருமானே, அடியார்க்கு எளியவனே, அரியவனே, பெரியவனே,
விலக்கரிய கதியாகுபவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப்
புகலிடமாகும்.
No comments:
Post a Comment