திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 33
பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணே ரொளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணே ருயிரே உணர்வே சரணம்
உருவே யருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை:
இசை பொருந்திய மறையை ஓதுவதால் விளையும் பயனே, பதிப் பொருளே,
பரம்பொருளே, விண்ணிடத்து விளங்கும் ஒளிப் பொருளே, அதனின் மேலாய வெளியே,
அவ்வெளியின் விளைவாகிய பொருளே, உடலினுள் நிலவும் உயிராயவனே, உணர்வு
வடிவாயவனே, உருவமாயும் அருவமாயும் உள்ள பொருளே, எனக்கு உறவாகியவனே, என்
கண்ணே, கண்ணின் மணியே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குக்
கதியாகும்.
No comments:
Post a Comment