03 July 2010

கந்தர் சரணப்பத்து - 1

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 32

அருளா ரமுதே சரணம் சரணம்
அழகா வமலா சரணம் சரணம்
பொருளா வெனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில் வாகனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
அருள் நிறைந்த அமுதமே, அழகனே, மலமில்லாத தூயனே, என்னையும்
பொருளாக மதித்து ஆள்கின்ற புனிதனே, பொன்னும் மணியும் போல்பவனே, மருட்சி
உடையார் நினைத்ததற் கரியவனே, மயிலை வாகனமாக உடையவனே, கருணைக்குச் சிறந்த
இடமானவனே, கந்தனே, உன் திருவடியே எனக்கு புகலிடமாகும்.

No comments:

Post a Comment