திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 39
ஒளியுள் ளொளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை:
ஒளிக்கு ஒளி நல்கும் காரணப் பொருளே, ஒன்றாகவும் பலவாகவும்
தோன்றும் பரம்பொருளே, தெளிவுடையார்க்கும் தெளிவு அளிக்கும் தெளிபொருளே,
சிவமே, சிவப் பேற்றுக்கு உரிய தவமே, நன்கு பழுத்த கனியே, அமிர்தமே,
அறிவே, இன்பமே பொருந்த அருள்பவனே, கந்தசாமிக் கடவுளே உன் திருவடியே
எனக்குப் புகலாகும்.
No comments:
Post a Comment