06 July 2010

கந்தர் சரணப்பத்து - 9

மன்னே யெனையாள் வரதா சரணம்
மதியே யடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம்
புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடிவே லரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:
மன்னவனே, எனை ஆண்டருளும் வரதனே, மதியே, தூயனே, புகழ்ந்து
பாடும் அன்பர் மனதில் புகுந்திருப்பவனே, அன்னை போல்பவனே, கூரிய
வேலேந்தும் வேந்தனே, ஆறுமுகப் பெருமானே, மலைப் போன்ற தோளை உடையவனே,
கந்தசாமிக் கடவுளே, சரணம் சரணம்.
--
Sent from my mobile device

No comments:

Post a Comment