திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 41
வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமான் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவை யில்லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை:
வேதத்தின் பொருளாயவனே, தேவர்கட்குப் பெருமானே, ஞான வடிவினனே,
அழகிய மயிலை வாகனமாக உடையவனே, ஓசையின் ஒலி வடிவாகியவனே, குற்றமே
இல்லாதவனே, கந்தசாமிக் கடவுளே உன் திருவடி எனக்குப் புகலிடமாகும்.
--
Sent from my mobile device
No comments:
Post a Comment