திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 51
போற்றெ னெனினும் பொறுத்திடல் வேண்டும்
புவிநடையாம்
சேற்றே விழுந்து தியங்கு கின்றேனைச்
சிறிதுமினி
ஆற்றே னெனதர சேயமுத யென்
அருட் செல்வமே
மேற்றேன் பெருகு பொழில் தணிகாசல
வேலவனே.
உரை:
மேன்மேலும் தேன் பெருகும் பொழில்களை உடைய தணிகை மலையுடைய
வேலவனே, என் அரசே, அமுதே, என் அருட் செல்வமே, இம்மண்ணுலக வாழ்வான
சேற்றில் வீழ்ந்து கரையேற முடியாமல் அறிவு மயங்கி இதுவரை உன்னைப் போற்றி
வழிபடாமலிருந்தேன். இனிச் சிறிதும் ஆற்றேன்; என் குற்றத்தைப் பொறுத்தருள
வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment