திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 52
வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும்
விளங்கு மயில்
மேல்கொண்ட வீறும் மலர்முக மாறும்
விரைக்கமலக்
கால்கொண்ட வீரக்கழலும் கண்டாலன்றிக்
காம னெய்யும்
கோல்கொண்ட வன்மை யறுமோ தணிகைக்
குருபரனே.
உரை:
திருத்தணிகை மலைமேல் எழுந்தருளும் குருபரனே, வேலேந்திய
கையும், வெற்றியுற்ற தோள்களும், விளங்குகின்ற மயில் மேல் வரும் தனிச்
சிறப்பும், தாமரைபோன்ற முகங்கள் ஆறும், திருவடியில் அணிந்த
வீரக்கண்டையும் கண்ணாரக் கண்டாலன்றிக் காமவேள் செலுத்தும் மலரம்புகளின்
வன்மை கெடாது.
No comments:
Post a Comment