16 July 2010

பிரார்த்தனை மாலை - 12

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 53
குருவே யயனரி யாதியர் போற்றக்
குறை தவிர்ப்பான்
வருவேல் பிடித்து மகிழ் வள்ளலே
குண மாமலையே
தருவே தணிகைத் தயாநிதியே துன்பச்
சாகரமாம்
கருவே ரறுத்திக் கடையனைக் காக்கக்
கடன் உனக்கே.

உரை:
குருவே; பிரமன், திருமால் முதலியோரால் போற்றப்படுபவனே; குறை
தீர்க்க வேலைப் பிடித்துள்ள வள்ளலே; சிற்குணங்களால் இயன்ற மலை போன்றவனே;
திருத்தணிகை மலையில் எழுந்தருளும் அருட் செல்வமே; துன்பக் கடலாகிய
பிறப்பின் வேரை அறுத்து கடையனாகிய என்னேக் காத்தருளுக.

No comments:

Post a Comment