திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 50
சிற்பகல் மேவுமித் தேகத்தை யோம்பித்
திருவனையார்
தற்பகமே விழைந் தாழ்ந்தேன் தணிகை
தனிலமர்ந்த
கற்பகமே நின்கழல் கருதேனிக் கடைப்
படுமென்
பொற்பக மேவிய நின்னருள் என்னென்று
போற்றுவதே.
உரை:
திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் கற்பகமே, நிலையில்லாத
இத்தேகத்தை விரும்பி, மங்கையர் போகத்தில் மூழ்கித் தாழ்ந்தேன். உன்
கழலணிந்த திருவடியை நினைக்காமல் சிறுமையுற்றேன். ஆயினும், என் கடைப்பட்ட
உள்ளத்தை வெறுத்து ஒதுக்காமல் அருள் கூர்ந்து எழுந்தருளிய உன் அருளினைப்
போற்றுகிறேன்.
No comments:
Post a Comment