13 July 2010

பிரார்த்தனை மாலை - 8

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 49
கொள்ளுண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு
வாழ்க்கையிற் குட்டுண்டு மேல்
துள்ளுண்ட நோயினிற் சூடுண்டு மங்கையர்
தோய் வெனு மோர்
கள்ளுண்ட நாய்க்குன் கருணையுண் டோநற்
கடலமுதத்
தெள்ளுண்ட தேவர் புகழ் தணிகாசலச்
சிற்பரனே.

உரை:
தூய கடல் அமுதத்தை உண்ட தேவர்கள் புகழும் தணிகாசல அரசே,
ஞானத்தால் மேலாயவனே, பிறர் பொருளை அபகரிக்கும் வஞ்சகர்களுடன் கூடி
நடத்திய வாழ்க்கையில் தாக்குண்டு, நோய்களால் வருந்தி, பெண்கள்
சேர்க்கையெனும் கள்ளை உண்டு அலையும் இந்நாய்க்கு உன் கருணையுண்டோ.

No comments:

Post a Comment