திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 48
அமராவதி யிறைக் காருயி ரீந்த
அருட் குன்றமே
சமரா புரிக்கரசே தணிகாசலத்
தற்பரனே
குமரா பரமகுருவே குகா வெனக்
கூவி நிற்பேன்
எமராசன் வந்திடுங்கால் ஐயனே எனை
ஏன்று கொள்ளே.
உரை:
அமரர் உலகமாகன அமராவதியின் அரசன் இந்திரனுக்கு வாழ்வளித்த அருட்
குன்றே, தொண்டை நாடான போருர்க்கு அரசனே, தணிகை மலையில் எழுந்தருளும்
மேன்மையுற்றவனே, குமரா, பரமகுருவே, குகா என உன் திருப்பெயர்களை சொல்லி
அழைக்கிறேன். எமன் என் உயிரை கவரும் போது அடியேனே ஆதரிக்க வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment