திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 47
நல்காத வீணர்தம் பாற்சென் றிரந்து
நவைப்படுதல்
மல்காத வண்ண மருள்செய் கண்டாய்
மயில் வாகனனே
பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும்
பரஞ் சுடரே
அல்காத வண்மைத் தணிகா சலத்தில்
அமர்ந்தவனே.
உரை:
சுருங்காத வளமை பொருந்திய திருத்தணிகை மலையில் வீற்றிருப்பவனே,
புலன்கள் மீது செல்லும் பலவகை ஆசைகளை அறுத்த நல்லோர்க்கு அருளும்
பரஞ்சுடரே, மயிலை ஊர்தியாக உடைய முருகப் பெருமானே, ஈயாத கீழ் மக்களிடம்
சென்று ஒன்று வேண்டி இரந்து வருத்தப்படும் குறை எனக்கு உண்டாகாதவாறு
அருள் புரிவாயாக.
No comments:
Post a Comment