11 July 2010

பிரார்த்தனை மாலை - 5

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 46
மணியே தினைப்புன வல்லியை வேண்டி
வளர் மறைவான்
கனியே யெனநின்ற கண்ணே யென்
னுள்ளக் களி நறவே
பணியே னெனினும் எனைவலிந்தாண் டுன்
பதந்தரவே
நணியே தணிகைக்கு வாவென வோர்மொழி
நல்குவையே.

உரை:
வள்ளியை அடைய வேண்டி தினைப்புனத்தில் வளரும் வேப்பமரமாக நின்ற
மணியே, என் நெஞ்சில் ஊரும் தேனே, யான் உன்னைப் பணியேன்; ஆயினும் எனை வலிய
ஆட்கொண்டு உன் பதம் தர தணிகைமலைக்கு வா என அழைத்து அருள் நல்குவாய்.

No comments:

Post a Comment