11 July 2010

பிரார்த்தனை மாலை - 4

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 45

அன்னே எனைத்தந்த அப்பா என்றேங்கி
அலறுகின்றேன்
என்னே யிவ்வேழைக் கிரங்காது நீட்டித்
திருத்தல் எந்தாய்
பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப்
பொருப்பமர்ந்த
மன்னே கலப மயில் மேல் அழகிய மாமணியே.

உரை:
அம்மையே, எனை தருவித்த தந்தையே, பொன்னே, மங்கல குணங்கள்
பொருந்திய குன்றுப் போல விளங்குபவனே, தணிகை மலையில் வீற்றிருக்கும்
மன்னனே, நீண்ட தோகைகள் உடைய மயிலில் ஏறும் அழகிய மாமணியே, உனை வேண்டி
ஏங்கி அரற்றுகிறேன். இந்த ஏழைக்காக நீ இரங்காமல் காலம் நீட்டிக்கும்
காரணம் அறியேன்.

No comments:

Post a Comment