திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 44
மாணித்த ஞான மருந்தே யென் கண்ணினுள்
மாமணியே
ஆணிப் பொன்னே யென தாருயிரே தணி
காசலனே
தாணிற் கிலேனினைத் தாழாத வஞ்சர்
தமதிடம் போய்ப்
பேணித் திரிந்தன னந்தோ வென் செய்வனிப்
பேதையனே.
உரை :
ஞானமாகிய மருந்தே, என் கண்ணினுள் விளங்கும் மாமணியே,
மாற்றுயர்ந்த பொன்னே, எனது ஆருயிரே, தணிகாசலனே, உன் திருவடிகளைத் தொழாத
வஞ்சகர் பால் சென்றேன். அந்தோ, என் செய்வேன்.
No comments:
Post a Comment