பிரார்த்தனை மாலை
திருவருட்பா - முதல் திருமறை - பாடல் எண் - 43
கண் மூன்றுறு செங்கரும்பின் முத்தே
பதம் கண்டிடுவான்
மண் மூன்றுலகும் வழுத்தும் பவள
மணிக் குன்றமே
திண் மூன்று நான்கு புயங்கொண் டொளிர்
வச்சிர மணியே
வண்மூன்றலர் மலைவாழ் ஏறிய
மாணிக்கமே.
உரை :
மூன்று கண்களை உடைய சிவப்பெருமானின் முத்தே, பன்னிரெண்டு தோள்களுடைய வைரமே, மயிலேறும் மாணிக்கமே, மூவுலகு மக்களும் உன் பாதங்களை வணங்குகிறார்கள். நானும் அவ்வாறே வணங்குகிறேன்.
No comments:
Post a Comment