திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 74
களித்து நின்திருக் கழலினை யேழையேன்
காண்பனோ அலதன்பை
ஒளித்து வன்றுய ருழப்பனோ வின்னதென்
றுணர்ந்திலே னருட்போதம்
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே
தேவர்கள் பணி தேவே
தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்
சிவ தாருவே மயிலோனே.
உரை:
தளிரும் இலையும் பூவும் தழைத்து நிழல்பயந்து நிற்கும்
பொழில்கள் நிறைந்த தணிகைப் பதியில் வளர்ந்தோங்கும் சிவமாகிய கற்ப தருவே,
மயிலை ஊர்தியாக உடையவனே, திருவருள் ஞானத்தைத் தெளிவாக உணர்த்தி நிற்கும்
குரு உருவே, தேவர்கள் வணங்கும் தேவனே, நின் திருவடிகள் இரண்டையும்
ஏழையாகிய யான் மனம் மகிழ இன்புறக் காண்பேனோ? அல்லது உன்பால் அன்பின்றி
மிக்க துயரம் உறுவேனோ, இன்னது ஆகுமென உணர முடியாதாவனாக உள்ளேன்.
No comments:
Post a Comment