22 July 2010

செழுஞ்சுடர்மாலை - 4

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 85
மின்னே ருலக நடையதனால்
மேவுந் துயருக் காளாகிக்
கன்னேர் மனத்தேன் நினைமறந்தென்
கண்டேன் கண்டாய் கற்பகமே
பொன்னே கடவுண் மாமணியே
போதப் பொருளே பூரணமே
தென்னேர் தணிகை மலையரசே
தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
அழகார்ந்த தணிகையில் வீற்றிருக்கும் அருளரசே, தெய்வமே, ஞானச்
செழுஞ்சுடரே, கற்பகமே, பொன்னே, தெய்வமணியே, ஞானப் பொருளே, பூரணமே,
மின்னலைப் போல் நிலையின்றி மறையும் உலக வாழ்வில் வந்தடையும்
துன்பத்திற்கு உள்ளாகி மனம் கல்லாகி நின் திருவடியை மறந்து என்ன பயன்
கண்டேன். ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment