23 July 2010

செழுஞ்சுடர்மாலை - 5

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 86
வளைத்தே வருத்தும் பெருந்துயரால்
வாடிச் சவலை மகவாகி
இளைத்தேன் தேற்றும் துணைகாணேன்
என்செய் துய்கேன் எந்தாயே
விளைத்தே னொழுகும் மலர்த்தருவே
விண்ணே விழிக்கு விருந்தேசீர்
திளைத்தோர் பரவும் திருத்தணிகைத்
தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
சான்றோர் போற்றும் திருத்தணிகையில் வீற்றிருக்கும் தெய்வமே,
ஞானச் செழுஞ்சுடரே, தேன் விளைந்து சொரியும் மலர்களையுடைய கற்பகத் தருவே,
கருணை மழையே, கண் களிக்கப் புதுமைக் காட்சி நல்கும் முருகப் பெருமானே,
என் மனத்தைச் சூழ்ந்து கொண்டு வருத்தும் பெருந்துயரால் உள்ளமும் உடம்பும்
மெலிவுற்றுச் சவலைக்குழந்தை போல் இளைத்துப் போனேன்; எனக்குத் துணை
புரிபவரையும் கண்டிலேன்; எந்தையே யான் யாது செய்து உய்தி பெறுவேன்,
அருளுக.

No comments:

Post a Comment