திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 87
அடுத்தே வருத்தும் துயர்க்கடலில்
அறியா தந்தோ விழுந்திட்டேன்
எடுத்தே விடுவார் தமைக்காணேன்
எந்தா யெளியேன் என்செய்கேன்
கடுத்தேர் கண்டத் தெம்மான்றன்
கண்ணே தருமக் கடலேஎன்
செடித்தீர் தணிகை மலைப்பொருளே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.
உரை:
குற்றமில்லாத தணிகை மலையில் எழுந்தருளும் பரம்பொருளே, தேனே,
ஞானச் செழுஞ் சுடரே, விடம் பொருந்திம கழுத்தை உடைய தலைவனாகிய சிவனின்
கண்ணே, அடுத்தடுத்து வந்து வருத்தும் துயரக்கடலில் அறிவு அறியாமையால்
வீழ்ந்து விட்டேன்; அதனினின்று எடுத்துக் கரையேற்றுவோர் ஒருவரையும்
காணவில்லை; எந்தையே, எளியனாகிய யான் என்ன செய்து உய்தி பெறுவேன்.
No comments:
Post a Comment