திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 77
குன்றுநேர் பிணித் துயரினால் வருந்திநின்
குரைகழல் கருதாத
துன்று வஞ்சகக் கள்ளனே னெஞ்சகத்
துயரறுத் தருள்செய்வான்
இன்று மாமயின் மீதினில் ஏறியிவ்
வேழைமுன் வருவாயேல்
நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ்
நாதநின் னடியாரே.
உரை:
தணிகை மலையில் எழுந்தருளும் நாதனே, மலைபோல் தோன்றும் நோய்
விளைவிக்கும் துன்பத்தால் மனம் வருந்தி, வீரக்கண்டை அணிந்த உன்
திருவடிகளை நினையாமல், வஞ்சகமும் கள்ளத்தனமும் உடைய நெஞ்சினால் வரும்
துன்பத்தைப் போக்கும் பொருட்டு என்முன் மயில் மேல் நீ வந்தருள்வாயின்,
நன்று; உன் அடியார்கள் நன்று நன்றென்று உன் அருளைப் பாராட்டாமல் வேறே
என்ன சொல்வார்கள் !
No comments:
Post a Comment