திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 79
உளங்கொள் வஞ்சக நெஞ்சர் தம்மிடமிட
ருழந்தகம் உலைவுற்றேன்
வளங்கொள் நின்பத மலர்களை நாடொறும்
வாழ்த்திலே னென்செய்கேன்
குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும்
குறிக்கரும் பெருவாழ்வே
தளங்கொள் பொய்கைசூழ் தணிகையம் பதியில்வாழ்
தனிப்பெரும் புகழ்த் தேவே.
உரை:
பொய்கைகள் சூழ்ந்த தணிகைப் பதியில் எழுந்தருளுபவனே, தனித்த
பெரும் புகழை உடைய தேவ தேவனே, நெற்றி கண்ணையுடைய சிவனும், கரிய நிறமுடைய
திருமாலும் பிரமதேவனும் குறிக்கொண்டு பரவுதற்குரிய பெருவாழ்வே, வஞ்ச
நினைவுடையவர்களிடம் சென்று துன்புற்று மனம் வருந்தினேனன்று அருள்வளம்
மிக்க உன் திருவடித் தாமரைகளை நாளும் வாழ்த்தி வணங்கவில்லை; இனி யான்
என்ன செய்வேன் ?
No comments:
Post a Comment