22 July 2010

எண்ணப்பத்து - 9

திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 80
தேவர் நாயக னாகியே என்மனச்
சிலைதனி லமர்ந்தோனே
மூவர் நாயக னெனமறை வாழ்த்திடும்
முத்தியின் வித்தே யிங்
கேவ ராயினும் நின்றிருத் தணிகைசென்
றிறைஞ்சிடி லவரேயென்
பாவ நாசஞ்செய் தென்றனை யாட்கொளும்
பரஞ்சுடர் கண்டாயே.

உரை:
தேவர்கட்கு நாயகனே, என் மனமாகிய கல்லில் பொறிக்கப்
பட்டிருப்பவனே, மூவர்கட் கெல்லாம் தலைவன் என மறைகள் துதிக்கும்
முக்திக்குக் காரணமாயவனே, உன் திருத்தணிகையை அடைந்து வணங்குபவர்
யாவராயினும் அவர்கள் என் பாவ வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்டருளும்
பரஞ்சுடராவர்.

No comments:

Post a Comment